25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

Date:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய மகாபாரதி

ஆட்சியர் மகாபாரதி பேச்சு:

ஆட்சியர் மகாபாரதி பேசுகையில், “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதை பெண், ஆண் குழந்தைகள் என இருவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை கவனமாக கையாள வேண்டும். காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல்துறையினர் எடுக்க வேண்டும்.

மூன்றரை வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி மீது தவறு உள்ளது. அந்த குழந்தை தப்பாக நடந்திருக்கு. காலையில் அந்த சிறுமி அவன் முகத்தில் துப்பியுள்ளது. இது எனக்கு கிடைத்த ரிப்போர்ட். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. கவனித்து பார்த்தால் இது தெரியும்” என்றார்.

மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி

பணியிட மாற்றம்

மகாபாரதியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மகாபாரதி பணியிடம் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மகாபாரதியிடம் பேசினோம், “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குடும்பத்திற்கும் பிரச்னை இருந்துள்ளது. பழிவாங்குவதற்காக அவன் இப்படி செஞ்சிருக்கான். குழந்தையின் பெற்றோர் மீது தவறுள்ளது என்கிற அர்த்தத்தில் பேசினேன். நான் தவறாக பேசுகிற ஆள் கிடையாது, குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள்.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....