18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

'சாரி சாரி பேச்சு வழக்குல..' – சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அழைத்த அதிமுக எம்எல்ஏ

Date:

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், “தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள். அதில், EB கெபாசிட்டி 100 KV மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. வெயில் காலத்தில் மின்சாரம் போதவில்லை. அதனால், 100 KV-யை 120 KV-யாகக் கொடுத்தால் சௌரியமாக இருக்கும்.

கருப்பண்ணன்

அதனால், EB-க்கு எந்த இழப்பும் இல்லை. மாப்பிள்ளைக்கு நன்றாகத் தெரியும்.” என்று அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் சிரிப்பலை எழ, “சாரி சாரி பேசிப் பேசி அப்படியே வந்துவிட்டது. 100 KV-யை 120 KV-யாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.” என்று கோரிக்கையாகக் கூறி அமர்ந்தார்.

செந்தில் பாலாஜி

அதைத்தொடர்ந்து பதிலளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மிக விரைவாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறை அதிகாரிகளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும்” என்று கூறி அமர்ந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Delimitation: 'இப்போ 9 சீட்டுகளை தானே இழந்திருப்போம்; ஆனா, 2026-ஐ பார்த்தால்' – பழனிசாமியின் கணக்கு

தொகுதி மறுவரையறை மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு எதிர்ப்பு...

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' – கொங்கு மண்டலம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...

ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' – டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...