6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' – த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

Date:

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக நீர்வளத் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை அரசிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

அன்புமணி

“தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நீர்த்திட்டங்கள், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் அரசிடம் வழங்கியுள்ளோம். ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்,” என்றார்.

மேலும், “இது மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகளையும் அழைத்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைக் கேட்டு, அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு உள்ளது. இதற்காக அந்த அரசை பாராட்டுகிறேன்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மத்தியப் பிரதேசம்: "வக்பு வாரியத்தில் 2 இந்து உறுப்பினர்கள் நியமனம்" – முதல்வர் மோகன் யாதவ் உத்தரவு

வக்பு என்பது ஒரு இஸ்லாமிய பாரம்பர்யமாகும். இந்த வக்புக்காக ஒருவர் தனது...

`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' – எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், தஞ்சாவூர்...

`Last Bench'சர்ச்சை: அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்...

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! – FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில்...