1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ – தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Date:

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறது. எனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய கல்விக் கொள்கை – 2020

உத்தரவிட முடியாது

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது, “தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்னை . அது அந்தந்த மாநிலங்களில் கொள்கை சார்ந்த விஷயம். இதில் எந்த ஒரு நீதிமன்றமும் நேரடியாக, `கட்டாயம் இந்த தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துங்கள்’ என உத்தரவிட முடியாது.

இந்த தேசிய கல்விக் கொள்கையை ஒரு மாநிலம் செயல்படுத்துவதன் மூலம் அல்லது செயல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஏதேனும் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்றால் நாங்கள் தலையிட முடியும். ஆனால் இந்த வழக்கில் அது போன்ற அம்சங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது” எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஜி.எஸ் மணி, `தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டில் இருந்தவரை தன்னால் இந்தி படிக்க முடியவில்லை. தன்னை படிக்க விடாமல் தடுத்தார்கள். தற்பொழுது நான் டெல்லியில் வசிக்கிறேன்’ என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இப்போது டெல்லியில் வசிக்கிறீர்கள் தானே இப்பொழுது தாராளமாக நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளலாமே” என சற்று கடுகடுப்புடன் கூறினர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' – அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில்...

மயிலாடுதுறை: இடுப்பளவுத் தண்ணீரில் இறுதி ஊர்வலம்… பல தலைமுறைகளாகத் தொடரும் கிராமத்தின் துயர்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, செம்பனார்கோயில் ஒன்றியம், ஆலவேலி ஊராட்சிக்கு உட்பட்ட இளையான்குடி...

யோகி Vs அகிலேஷ்: அமைச்சரவை மாற்றம்; சமூக சமன்பாடுகள்; பாஜக-வின் தேர்தல் வலை! – கைகொடுக்குமா?

உத்தரப்பிரதேசம்மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், 80 மக்களவைத்...

`காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடாதது குறித்து திமுகவிடம் கேள்வி எழுப்பியதுண்டா?'- திருமாவளவன்

மேலவளவு முருகேசன் மற்றும் 6 பேரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம்,...