3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

இந்தியா, கனடா உறவில் விரிசல்; சரிசெய்யும் முயற்சியில் கனடா? – அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வதென்ன?

Date:

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அப்போது முதல் இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அது நாளுக்குநாள் அதிகரித்தது. இதற்கிடையில், பொருளாதாரம், நிர்வாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்குப் பிறகு கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். தொடர்ந்து, இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்தை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

அனிதா ஆனந்த் (Anita Anand)

கனடாவின் முதல் இந்து வெளியுறவுத்துறை அமைச்சர் என்றப் பெருமையுடன் இந்தியா – கனடாவின் உறவில் உள்ள விரிசலை சரிசெய்ய முயன்றுவருகிறார் அனிதா ஆனந்த்.

அதன் அடிப்படையில், நேற்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், கனட வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தும் தொலைபேசியின் மூலம் பேசிக்கொண்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், “கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உடனான தொலைபேசி உரையாடலைப் பாராட்டுகிறேன். இந்தியா-கனடா உறவுகளின் வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். அவரது பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' – திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி...

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" – திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும்...