25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

`இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல..!’ – அமெரிக்கா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு சொல்வதென்ன?

Date:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. மே 10 அன்று ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் தலையீட்டால் ஒரு புரிதல் ஏற்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். எனினும் இந்தியா இதனை மறுத்து வருகிறது. இன்றளவும் பிரதமர் மோடி எங்குப் பேசினாலும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்தியா, பாகிஸ்தான்

இந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ், உளவுத்துறைக்கான அமெரிக்க ஹவுஸ் துணைக்குழுவிற்கு `உலகளாவிய அச்சுறுத்தல்’ என்றத் தலைப்பில் ஒரு மதிப்பாய்வு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், “பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் போக்கு இருந்தாலும் இந்தியா தன் முக்கிய எதிரியாக சீனாவைதான் கருதுகிறது. பாகிஸ்தானை நிர்வகிக்க வேண்டிய துணை பாதுகாப்பு பிரச்னையாக மட்டுமே பார்க்கிறது.

இந்தியா சீனாவை அதன் முதன்மை எதிரியாகக் கருதுகிறது. எனவே, இந்தியா போர்க்கள அணு ஆயுதங்களை உருவாக்குவது உட்பட அதன் இராணுவ நவீனமயமாக்கல் முயற்சியைத் தொடரும். அதே நேரம் பாகிஸ்தான் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கி வருகிறது. வெளிநாட்டு சப்ளையர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து WMD-பொருந்தக்கூடிய பொருட்களை வாங்குகிறது. சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளைப் பாகிஸ்தான் முதன்மையாகப் பெறுகிறது.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

மேலும் பாகிஸ்தான் படைகள் சீனாவின் PLA உடன் ஒவ்வொரு ஆண்டும் பல ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. ஜேஎஃப்-17 மற்றும் ஜே-10சி மற்றும் பிஎல்-15 ஏவுகணை போன்ற சீனப் போர் விமானங்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதல்களின் போது பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் பேரழிவு ஆயுதங்கள் (WMD), வெளிநாட்டுப் பொருட்கள், தொழில்நுட்பங்கள் முதன்மையாக சீனாவில் உள்ள சப்ளையர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாகவும் இந்தப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) பதட்டங்கள் விரைவாக அதிகரிக்கும் சூழல் இருக்கிறது. எனவே இந்திய அரசு இனி உலகளாவிய தலைமையை நிரூபிப்பது, சீனாவை எதிர்கொள்வது, இராணுவ சக்தியை மேம்படுத்து என இதில் கவனம் செலுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மைகளை முன்னேற்றுவதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.

லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ்
லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ்

உள்நாட்டு பாதுகாப்புத் துறையை, அதன் இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா “மேக் இன் இந்தியா” முயற்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும். 2024-ம் ஆண்டில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய அக்னி-I பிரைம் MRBM மற்றும் அக்னி-V பல சுயாதீனமாக இலக்கு வைக்கக்கூடிய சோதனையை நடத்துவதன் மூலமும், இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இயக்குவதன் மூலமும் இந்தியா இராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகளைத் தொடர்ந்தது.

அதே நேரம், ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா பராமரிக்கும். ஏனெனில் இந்த உறவுதான் இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்கு முக்கியமானது. ரஷ்யாவிலிருந்து வரும் இராணுவ உபகரணங்களை வாங்குவதை இந்தியா குறைத்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ரஷ்யாவிலிருந்து வரும் டாங்கிகள் மற்றும் போர் ஜெட் விமானங்களை பராமரிக்க ரஷ்ய உதிரி பாகங்களையே இந்தியா நம்பியுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத்...

“உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" – விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம்...

"செங்கோட்டையன் பேசுறது சரியா…" – ஆளுநரிடம் கொதித்த டி.டி.வி.தினகரன்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ரணகளக் காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில், திடீர் அரசியல்...

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு! – பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான...