17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி

Date:

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.

நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய விஷயம் இணையத்தில் தீயாய் பேசப்பட்டது. தற்போது ஆதவ் அர்ஜூனாவின் மனைவியான டெய்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரஸ்பரம் அவர்கள் எடுக்கும் சுயாதீனமான முடிவு குறித்தும், பர்சனல் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பது குறித்தும் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

அந்த அறிக்கையில் அவர், “நான் டெய்சி. நானும் ஆதவ் அர்ஜுனாவும் பர்சனல் மற்றும் வேலைகள் சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பதுதான் எங்களுடைய முடிவு. அனைத்து வேலை சார்ந்த விஷயங்கள், அரசியல் சார்ந்த முடிவுகள் சுயாதீனமாக எடுக்கப்படுவதுதான். அதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தவறாக பகிரப்பட்டு வரும் தகவல்களையும் வதந்திகளையும் அகற்றுவதுதான் இந்த அறிவிப்பு கடிதத்தின் நோக்கம்.

எங்கள் இருவருக்கும் தனித்தனியான பார்வை இருக்கிறது. இருவரின் முடிவுகளுக்கும், தனியுரிமைக்கும் பரஸ்பரம் மதிப்புக் கொடுப்பவர்கள் நாங்கள். பொய்யான கருத்துகள் பகிரப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எங்களை ஒருவருக்கொருவர் வேலை சார்ந்த விஷயம் மற்றும் பொதுவாழ்க்கையில் சிக்க வைக்காமல் இருப்பதற்கு எங்களின் நண்பர்கள், உறவினர்களிடம் மரியாதையாக கோரிக்கை வைக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி...

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என...

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது...