20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

மத்திய அரசு நிகழ்ச்சி: முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! – என்ன நடந்தது?

Date:

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 45 இடங்களில் அரசு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய இணைமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

எல்.முருகன்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு முன்னுரிமையை ஏற்கும் வகையில் சென்னை நிகழ்வில் முதன்முதலாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டு விழா முறைப்படி தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்தச் சூழலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து விழா தொடங்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ `ஆள்மாறி கொன்றுவிட்டோம்' என்கிறார்கள்; காற்றில் பறக்கிறது சட்டம் ஒழுங்கு" – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்....

`இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை' – விஜய்யை சாடிய எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

"ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.!"- தவெகவை சாடிய இபிஎஸ்

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்...

தவெக: “ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை...