18
July, 2026

A News 365Times Venture

18
Saturday
July, 2026

A News 365Times Venture

`பாஜக கூட்டணியால் அதிமுக-வில் இருந்து நான் விலகுகிறேனா?' – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Date:

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல்14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைந்தால் நான் கட்சியில் இருந்து விலகுவதாகத் திருமாவளவன் அவருடைய கருத்தைக் கூறியிருக்கிறார். இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி. நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

எங்களின் குடும்பம் 75 ஆண்டுக்காலம் திராவிட பாரம்பர்யம் கொண்டது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை.

எங்களின் குடும்பத்தை அ.தி.மு.க., அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் தான்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பதவிக்காக ஜெயக்குமார் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை.அ.தி.மு.க., தான் என்னுடைய உயிர்மூச்சு” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சரத் பவாரின் MPக்களுக்காக தேசியவாத காங்கிரஸை இணைக்க பாஜக முயற்சி; அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் மறைந்த துணை முதல்வர் அஜித்பவார் காலமான பிறகு தேசியவாத காங்கிரஸ்...

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு? மாறிய நிலைப்பாட்டின் பின்னணி என்ன?

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி...

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார்...

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து...