14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா… சீமானின் புகாரும் அரசு விளக்கமும்!

Date:

நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரெழுச்சிப் பொது கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “மே 18 துயரம் மிகுந்த நாள். மே 18-ம் தேதி தமிழக மக்களின் துயர நாள் என்று ஏன் அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.

சீமான்

ஒரு இனம் தனக்கென எப்போது ஒரு நாடு அடைகிறதோ அப்போதுதான் விடுதலை கிடைக்கும்.  காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக ஆகிய நான்கு பேரும் தமிழ் இனத்தின் பகைவர்கள்.

கோவை மாவட்டத்தில் இன்று மட்டும் ஏன் அரசு பொருட்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கி உள்ளார்கள். இத்தனை நாள்கள் இல்லாமல் இன்றைக்கு அங்கு ஏன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நான் பிரபாகரன் மகன் என்பதால் இப்படி செய்கிறார்கள். “ என்றார்.

கோவை பொருட்காட்சி

இது சமூகவலைதளங்களில் பரபரப்பான விவாத பொருளானது. நாம் தமிழர் கட்சியினர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கு திமுகவினரும் நாம் தமிழர் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “கோவை அரசு பொருட்காட்சியில் 17வது நாளில் (18.5.2025) நுழைவு கட்டணமாக ரூ.1,61,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. 9,442 பெரியவர்கள், 1,937 குழந்தைகள் என்று மொத்தம் 11,379 மக்கள் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

கோவை பொருட்காட்சி

கடந்த 17 நாள்களில் மொத்தம் 1,12,207 மக்கள் பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இதற்காக  மொத்தம் ரூ.15,79,230 நுழைவு கட்டணம் வசூலாகியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள்...

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் – என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம்,...

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' – ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது....

திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற...