27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

நயினார் நாகேந்திரனை சந்தித்த இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் – திருப்பூரில் நடந்தது என்ன?

Date:

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த பின், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மந்திரம் மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சின்னசாமி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நயினார் நாகேந்திரனை இருவரும் சீருடையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. எனினும், காவல் துறை சீருடையுடன் சென்று பேசியதால் அவர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

இதேபோல திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் நல்லசாமி. இவர் குற்றவாளி ஒருவரின் மனைவியிடம் செல்போனில் அழைத்து தவறாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை மாநகர காவல் ஆணையர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 3 பேர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....