20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

`திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்' – மு.க.ஸ்டாலின் அதிரடி

Date:

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை அவர் வகித்த கட்சி பதவியில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமை கழகம்.

பொன்முடி பேசியது என்ன?

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ வைரல் ஆனது. பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோ வேகமாக பரவ, பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கண்டனம்

கனிமொழியின் பதிவு

பொன்முடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ‘ஓசி டிக்கெட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இவரது சர்ச்சை பேச்சுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பொன்முடியை கழக துணைப் பொதுச்செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமைக் கழகம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' – குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி...

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' – முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்தொடக்க பால்...

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான...

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' – சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில்...