விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ” ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில் த.வெ.கவை ஆதரிப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே விஜய்க்கு ஆதரவு அளித்தோம்.
தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பது அவசியம். மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.
தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சி செய்கிறது. அதனைத் தடுக்கவே த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
இன்னொரு தேர்தலைத் தடுக்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையைத் தடுக்க நாங்கள் த.வெ.கவை ஆதரிக்கிறோம். த.வெ.க அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். த.வெ.கவுடன் கூட்டணி அல்ல, ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு தந்திருக்கிறோம்.
த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்று ஸ்டாலின் கூறவில்லை. ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும்போது திமுகவுடன் இணைந்து போராடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.




