29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

Date:

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன ‘ஸ்பீச்’சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் புதுகாட்சிகள்.

அந்தப் பேச்சில் விஜய் குறிப்பிட்ட முக்கியமான ஒன்று, “ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது.

எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்” என்பதுதான்.

தமிழ்நாடு

இந்தப் பேச்சில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்கிற கேள்வி பலருக்கு எட்டி பார்த்திருக்கும். அந்தக் கேள்விக்கான பதில்தான் இதோ…

குறிப்பிட்ட ஒரு விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து, அதன் வெளிப்படையான அறிக்கை அரசாங்கம் வெளியிடுவதே ‘வெள்ளை அறிக்கை’.

இந்தியாவில் நடந்த 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியால், இன்னும் பல பிரிட்டிஷ் நடைமுறைகள் இந்தியாவில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தான் இதுவும்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைப்படி, முக்கியமான பிரச்னைகளுக்கு வெள்ளை அறிக்கை தயார் செய்வது வழக்கம்.

நெருக்கடி நிலையை மக்களுக்கும், பிற கட்சிகளுக்கும் எடுத்துக்காட்ட பொதுவாக வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படும்.

விஜய் வெளியிடும் வெள்ளை அறிக்கை என்பது ‘நிதி அடிப்படையிலானது’ என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

கடன்
கடன்

அதனால், அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்படி இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது, இன்னும் எத்தனை கடன் வாங்க முடியும், வருமானத்தை எப்படி பெருக்கலாம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியமைத்த போதும், அப்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம்...

`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' – அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம...

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...