25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

TVK: தவெக இரண்டாமாண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளரைத் தாக்கிய பவுன்சர்கள்; வலுக்கும் கண்டனம்!

Date:

விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு விருந்தினராகத் தேர்தல் வியூக வகுப்பாளரும் பீகார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.

தவெக – விஜய், பிரசாந்த் கிஷோர்

இவ்வாறிருக்க, இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவரை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம், “தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி.

பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களைப் பாதுகாக்கும் த.வெ.க நிர்வாகிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....