10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

Trump: 'புதின் ஆசை இதுவே…' – நண்பரை பற்றி மனம் திறக்கும் ட்ரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் – இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உலகம் அறிந்ததே.

‘நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன்’ என்று தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் கூறியிருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் சம்பந்தமாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். எத்தனை முறை என்று சொல்லமாட்டேன். போர்களத்தில் பலர் இறப்பது புதினுக்கும் மிகுந்த வருத்தம் தான். இப்படி மக்கள் இறப்பதை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில்…

2022-ம் ஆண்டு, அமெரிக்காவின் அதிபராக நான் இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது. எனக்கும், புதினுக்கும் நல்ல உறவு இருக்கிறது.

ஜோ பைடன் நாட்டுக்கு ஓர் அவமானம் ஆவார்.

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முழுமையான திட்டம் என்னிடம் உள்ளது. போர் விரைவில் நிற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைன் மிக மோசமான நிலையில் உள்ளது.

உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா உதவுவதற்கு, உக்ரைன் நாட்டில் உள்ள அரிதான கனிமங்கள் மற்றும் வாயுவை எடுப்பதற்கான 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அமெரிக்கா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' – தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து...

தமிழ்த்தாய் வாழ்த்து: “பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" – முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய...

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள்...