25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

Trump: 'புதின் ஆசை இதுவே…' – நண்பரை பற்றி மனம் திறக்கும் ட்ரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் – இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உலகம் அறிந்ததே.

‘நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன்’ என்று தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் கூறியிருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் சம்பந்தமாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். எத்தனை முறை என்று சொல்லமாட்டேன். போர்களத்தில் பலர் இறப்பது புதினுக்கும் மிகுந்த வருத்தம் தான். இப்படி மக்கள் இறப்பதை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில்…

2022-ம் ஆண்டு, அமெரிக்காவின் அதிபராக நான் இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது. எனக்கும், புதினுக்கும் நல்ல உறவு இருக்கிறது.

ஜோ பைடன் நாட்டுக்கு ஓர் அவமானம் ஆவார்.

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முழுமையான திட்டம் என்னிடம் உள்ளது. போர் விரைவில் நிற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைன் மிக மோசமான நிலையில் உள்ளது.

உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா உதவுவதற்கு, உக்ரைன் நாட்டில் உள்ள அரிதான கனிமங்கள் மற்றும் வாயுவை எடுப்பதற்கான 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அமெரிக்கா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....