10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

Trump: 'அமெரிக்க கல்வித்துறையை கலைக்க கையெழுத்திட்ட ட்ரம்ப்…' – காரணம் என்ன?!

Date:

நேற்று அமெரிக்க அரசின் கல்வித்துறையைக் கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க கல்வி மையங்களில் மூன்றாம் பாலினம் பற்றி போதிக்கிறார்கள், போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற பல விஷயங்களுக்கு அமெரிக்க கல்வித்துறையை கடுமையாகச் சாடி வந்தார் ட்ரம்ப். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் அதிபரானால் அமெரிக்க கல்வித்துறையைக் கலைப்பேன் என்ற வாக்குறுதியைக் கூறியிருந்தார் ட்ரம்ப். சொன்னதை தற்போது செய்துள்ளார்.

இந்தத் துறையை கலைத்ததற்கு ட்ரம்ப் கூறும் காரணம், “பிற நாடுகளை விட, அமெரிக்கா கல்விக்காக அதிக செலவுகளை செய்து வருகிறது. அமெரிக்க கல்வித்துறை என்று ஒன்று இருந்தும், அமெரிக்க மாணவர்கள் கல்வி பட்டியலில் மிகவும் கீழே தான் உள்ளார்கள்” என்பதாகும்.

காரணம் என்ன?!

இவரின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருமா என்பது பெரிய சந்தேகம் தான். அரசு சார்ந்த ஒரு துறையை கலைக்கும்போது, அதற்கு கண்டிப்பாக காங்கிரஸின் ஆதரவும் வேண்டும். அமெரிக்க கல்வி துறையை கலைக்கும் உத்தரவிற்கு காங்கிரஸின் ஆதரவு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இன்னொரு பக்கம், இந்தத் துறையை கலைத்தால் அமெரிக்காவில் கல்வியின் எதிர்காலம், கல்வி கடன்களை வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் எழும். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஆக, இது அமலுக்கு வருமா…வராதா என்பது காங்கிரஸ் முடிவை பொறுத்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட...

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...

குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள்...