9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

Telangana: "CBSC, ICSE, IB பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்" – காங்கிரஸ் அரசு முடிவு!

Date:

தெலுங்கானா அரசு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.இ, ஐ.சி மற்றும் அனைத்து போர்டு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை 2020, தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பிராந்திய மொழியைக் கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதன் அடிப்படையில் இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

இதுகுறித்து பிப்ரவரி 25ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டாக்டர் யோகிதா ராணா வெளியிட்ட அரசு அறிவிப்பில், 2025-26ம் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தெலுங்கு பாடத்திட்டம் மாறும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக 9ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் சிங்கிடிக்கு (பழைமையான தெலுங்கு) பதிலாக ‘வென்னெலா’ (எளிமையான தெலுங்கு) கற்றுக்கொடுக்கப்படும் என்றும் 2026-27 கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மொழிகள்

சிங்கிடி என்பது பாடங்களில் கற்றுக்கொடுக்கப்படும் தூய தெலுங்கு. வென்னெலா என்பது குழந்தைகள், மாணவர்களுக்கு எளிதாக மொழியை கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை 2020ன் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பியிருக்கும் நிலையில், தெலங்கானாவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையின் படி மாணவர்கள் பிராந்திய மொழி, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக மற்றொரு மொழியை கற்றுகொள்ள வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் – செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி...

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய...

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து...

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...