3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

Pahalgam : 'இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும்..!' – நியூயார்க் டைம்ஸை சாடிய அமெரிக்க அரசு

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல… உலக அரங்கிலும் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம்.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை என உலகின் பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீண்டது. இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு என்ன தலைப்பு?

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் செய்தித்தாளான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, “காஷ்மீரில் குறைந்தது 24 சுற்றுலா பயணிகள் போராளிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்று தலைப்பிட்டிருந்தது.

இந்தத் தலைப்பு பெரும் அதிர்வை கிளப்பியது. காரணம், போராளி, தீவிரவாதி – இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் தலைப்பை மாற்றிய அமெரிக்க அரசு

போராளிகள், தீவிரவாதிகள் வித்தியாசம்

போராளி என்றால் ஒரு விஷயத்திற்காக கடுமையாக போராடுபவர்கள் ஆவார்கள்.

தீவிரவாதி என்றால் ஒரு விஷயத்திற்காக இவர்களும் கடுமையாக போராடுவார்கள் தான். ஆனால், இவர்கள் பாதை ஆயுதம் மற்றும் வன்முறை நிறைந்ததாக இருக்கும். அப்பாவி மக்களை குறிவைப்பார்கள்.

அமெரிக்க அரசின் எதிர்ப்பு

நியூயார்க் டைம்ஸின் இந்தத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், “ஹே, நியூயார்க் டைம்ஸ், உங்களுக்காக நாங்கள் தவறை சரி செய்துள்ளோம். இது ஒரு தீவிரவாத தாக்குதல்.

இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், தீவிரவாதம் என்று வரும்போது நியூயார்க் டைம்ஸ் யதார்த்தத்தில் இருந்து விலகிவிடுகிறது” என்று பதிவிட்டுள்ளது.

இந்தப் பதிவில் பதவிடப்பட்டுள்ள நியூயார்க் டைம்ஸ் செய்தியின் தலைப்பில் ‘போராளிகள்’ என்பதை அடித்து ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்க பாதுகாப்பு துறை மாற்றி பதிவிட்டுள்ளது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சேவை செய்யவே சீருடை" – நடுரோட்டில் பாஜக அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் புது வீடியோ வைரல்

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு...

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

தமிழக புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத்...

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' – திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி...