24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ – இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

Date:

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று டிரோன் தாக்குதல் மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கு பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் காணொளியை இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ x பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் இந்திய ராணுவம் கூறியிருப்பதாவது, ”ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் மே 08 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை தகர்த்தெறிந்தது.

கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்திருந்த பயங்கரவாத ஏவுதளங்கள், இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்திய ராணுவத்தின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையால் பயங்கரவாத திட்டங்கள் தவிடுபொடியாகின” என்று இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து தெரிவிக்கப்பட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...

"முதல்வருக்கான மாண்பை பேண வேண்டும்: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- திருமாவளவன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...

’பாஜகவிடம் தவெக என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது’ – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...