26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

Operation Sindoor: `பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது’ – ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கும் பாதுகாப்புத்துறை|Live

Date:

ஆபரேஷன் சிந்தூர்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் எனும் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

Operation Sindoor

அதே நேரம், இரு நாட்டின் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான வார்த்தைப்போர் நடந்தது. இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் , பாகிஸ்தானின் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களில் தலைமையகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

விளக்கும் மத்திய அரசு:

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமானர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் பஹல்காம் தாக்குதல். குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல… இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! – மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' -...

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' – கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம்...

`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத்தவ் எம்.பி மிரட்டல்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள்...

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" – முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு...