28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' – மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

Date:

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

நேபாளம் வெள்ளம்

நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக அரசின் புதுடெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் நாராயணா பேட்டியளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “கைலாஷ் யாத்திரை மற்றும் சூப்பர் யாத்திரைக்காகத் தமிழகத்திலிருந்து சுமார் 380 முதல் 390 பயணிகள் வரை நேபாளத்திற்குச் சென்றுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக 148 பேர் கொண்ட ஒரு குழு பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாளைத் தமிழகம் திரும்புவார்கள். மேலும் 39 பேர் கொண்ட மற்றொரு குழுவினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வெங்கட நாராயணா
வெங்கட நாராயணா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகிறோம்.

இன்னும் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கும் 49 பேரைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே போதுமான அளவு தமிழ் பேசும் அதிகாரிகள் மீட்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை மீட்பு நடவடிக்கைகள் குறித்துத் தகவல்களைப் பெற்று வருகிறோம். மாயமான நமது மக்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்?

விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற...

"கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"- உதயநிதி vs செங்கோட்டையன்

சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை...

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை!

நாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான...

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ...