24
April, 2026

A News 365Times Venture

24
Friday
April, 2026

A News 365Times Venture

NEP: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" – மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

Date:

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்டிய பாஜக அரசு ஒதுக்க மறுப்பதாக ஆளும் திமுக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

கல்விக் கொள்கை

வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திரா பிரதான், “உலகமே மாறிவரும் சூழலில் மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்கிற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறதா? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை.” என்று கூறினார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய தர்மேந்திரா பிரதான், “காசி தமிழ் சங்கமம் மூலம் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ கலாசார பாரம்ர்யத்தில், புதிய அத்தியாயத்தைச் சேர்க்க பிரதமர் மோடி இலக்கு வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து கல்வித்துறை நடத்துகிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" – பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர்...

Iran: "கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" – இஸ்ரேல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல்...

Final Announcement: தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 85% பதிவாகி புதிய சாதனை!

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில்...