10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' – ரிஜிஜு சொல்வதென்ன?

Date:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக… மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இடையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20-ம் தேதி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

இதை தடுக்க பேரணி நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் தடியடி நடத்தினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசினர் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.

இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது?

இதையடுத்து, ‘இந்த நடவடிக்கை ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆளும் பாஜக தரப்போ, “மாணவர்கள் மீது தடியடி நடத்த உள்துறை அமைச்சர் சொல்லவில்லை. அப்படி உத்தரவிடுவதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை.

இந்த முடிவு டெல்லி போலீசாரிடமே உள்ளது” என்று வாதாடுகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள், “அமித் ஷாவிற்கு தெரிந்து இந்த வன்முறை நடந்திருந்தால் அது தவறு. அவருக்கு தெரியவில்லை என்றால், அது நிர்வாகக்கேடு. இப்படி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒருவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை.

எது எப்படி இருந்தாலும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பதிலடி தருகின்றன.

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்கிற கேள்வியைக் கேட்டு தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

பாஜகவின் கண்டிஷன்

வருகிற 13-ம் தேதியோடு முடிவடையும் கூட்டத்தொடரில் இதுவரை 16 அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், ஜூன் 20-ம் தேதியை தவிர்த்து, ஒரு நாள் கூட அமித் ஷா அவைக்கு வரவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வே அமித் ஷாவின் ஆப்சென்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று, “மாணவர்கள் போராட்டம் குறித்து முழுமையாக விவாதிக்க அரசு தயார். ஆனால், உள்துறை அமைச்சரின் விளக்கத்தின் போது, எதிர்க்கட்சிகள் அமளியோ, அவை நடவடிக்கையை தடுப்பதுபோலவோ எதுவும் செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! – நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3...

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: “தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வாழ்த்துகள்" – சீமான்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட...

'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! – சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது....

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் – முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும்...