17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" – புதிய பிரதமர் மார்க் கார்னி உறுதி

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற நாள் முதல் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கத் தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறான சூழலில், இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா (Canada) பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் – ஜஸ்டின் ட்ருடோ

மேலும், “கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுமா…. அதற்கு வாய்ப்பே இல்லை. ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கனடா ஒருபோதும் பின்வாங்காது” என்று தெரிவித்த ஜஸ்டின் ட்ருடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவியில் தொடர்வேன் என்று கூறினார். இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் எனச் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, “நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை” என்று கூறினார்.

மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து...

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி...

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என...