29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

Live: "இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை அவசியம்" – அமெரிக்கா

Date:

“இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை அவசியம்” – அமெரிக்கா

“இந்தியா பாகிஸ்தான் மோதல் மேலும் அதிகரிக்கக் கூடாது என்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது. இது பல தசாப்தங்களாக இருந்துவருகிறது. இப்போது நடக்கும் மோதல்கள் அதிர்ச்சியளிப்பதாக இல்லை. ஆனால், மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்காமல் இருக்க இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக அவசியம். அமைதியாக இருக்கக் கூடாது. கடந்த இரண்டு நாள்களாக இருநாடுகளின் பல்வேறு தலைவர்களுடன் உரையாடுவதில் அமெரிக்கா மையத்தில் இருந்துவருகிறது.” – அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ்

“உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் இருக்காது” – மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானுக்கு தைரியம் இல்லை. இந்தியாவும், பிரதமர் மோடியும் அவர்களுக்குப் பாடம் கற்பித்திருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக ஏதாவது செய்தால், நமது ஆயுதப் படைகள் பாகிஸ்தானை அழித்துவிடும். உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் தெரியாது. இது வெறும் டிரெய்லர் மட்டும்தான். மேலும் பாகிஸ்தான் எதாவது புத்திசாலித்தனமாக செய்ய முயற்சித்தால், அதற்கு தகுந்த பதில் கிடைக்கும். நமது வீரர்கள் பொதுமக்கள் எவரையும் தாக்கவில்லை, தீவிரவாதிகளின் தளங்களை மட்டுமே அழித்து, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்துள்ளனர்.” – ஏக்நாத் ஷிண்டே

2 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது!

ஜம்மு & காஷ்மீரின் நௌஷரா பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு ட்ரோன்களை இந்திய ராணுவ வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல்!

பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதலுக்கு இந்தியா எதிர் தாக்குதல் நடத்திவரும் சூழலில், பாகிஸ்தானிலுள்ள கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் மூடல்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மே 9, 10 தேதிகளில் செயல்படாது” என அரசு அறிவித்திருக்கிறது.

3 மணிநேரத்துக்கு முன்பாக விமான நிலையங்களுக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் சம்பவங்கள் வலுவடையும் நிலையில், விமான பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையங்களுக்கு வந்து பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு விமான சேவை நிறுவனங்கள் அறிவுறுத்தல்.

“உயிரிழப்புகள் எதுவும் இல்லை” – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதலை நடத்திவருகிறது. அங்கிருந்து வரும் ட்ரோன்கள், விமானங்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம்,  S-400 சுதர்சன் சக்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், “ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் குறிவைக்கப்பட்டன. இருப்பினும் Standard Operating Procedures (SOPs) மூலம் அவை முறியடிக்கப்பட்டன.

உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டகாக எதுவும் பதிவாகவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையாகத் தயாராக உள்ளது.” என்று பதிவிட்டிருக்கிறது.

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்திவருகிறது.

பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட F-16 விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்த பாகிஸ்தான் விமானி ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பிடிபட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! – நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர...

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' – முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார்...