17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

Kerala: `8 ஆண்டில் 1000 பேர் மரணம்; வனவிலங்கு விஷயத்தில் சட்டத் திருத்தம் வேண்டும்' -கேரள காங்கிரஸ்

Date:

கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கியதில் ராதா என்ற காபி தோட்டத் தொழிலாளி சில நாள்களுக்கு முன் மரணமடைந்தார். அவரை தாக்கி சாப்பிட்ட பெண் புலி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வனவிலங்குகளின் தாக்குதலால் மலையோர கிராம மக்கள் பீதியுடன் வாழ்வதை கண்டுகொள்ளாத சி.பி.எம் தலைமையிலான அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ‘மலையோர சமர யாத்திரை’ சில நாள்களுக்கு முன் கண்ணூரில் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தலைமையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வி.டி.சதீசன் கூறுகையில், “கேரள மாநிலத்தில் மலையோர பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் மக்கள் பாதிக்கப்படுவது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். வனவிலங்கு ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். குழந்தைகக் வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சருகுகள் அசையும் சத்தம் கேட்டால்கூட வீட்டில் இருக்கும் மக்கள் பயப்படும் நிலை உள்ளது.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

வனவிலங்கு தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவருகிறோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக பலமுறை கேரள சட்டசபையில் இதுபற்றி பேசியுள்ளோம். அவசர தீர்மானம் கொண்டுவரவேண்டும் என நான்கு முறை வலியுறுத்தியுள்ளோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இந்த விஷயம் குறித்து சட்டசபையில் உரக்க குரல் எழுப்பி வந்துள்ளோம். ஆனால், ஆளும்கட்சியினர் சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வருகிறார்கள். அதனால்தான் அதிகரித்துவரும் வனவிலங்கு தாக்குதலை தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மலையோர சமர யாத்திரை-யை தொடங்கியுள்ளோம்.

யாத்திரையை தொடங்கிய பின்னர்தான், இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பது எங்களுக்கு புரிந்தது. யாத்திரை செல்லும்போது வனவிலங்கு தாக்குதலுக்கு எந்தமாதிரியான தீர்வு ஏற்படுத்தலாம் என மக்கள் கூறும் கருத்துகளை அரசுக்கு எடுத்துரைப்போம். திருவனந்தபுரத்தில் இந்த யாத்திரையை நிறைவுசெய்யும்போது அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்வை நாங்கள் எடுத்துரைப்போம். அதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆலோசனைகளையும் பெறுவோம்.

வனவிலங்கு தாக்குதலை தடுப்பதற்காக மதில் சுவர்கள் ஏற்படுத்துவது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதுபற்றி கடந்த 4 ஆண்டுகளாக அரசுக்கு தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. ஆனால் கேரளத்தில் வன விலங்குகள் தாக்குதல் குறைந்துள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார். 2019 -ம் ஆண்டு முதல் வனவிலங்குகள் தாக்குதல் அதிகரித்துள்ளன. கடந்த சுமார் 8 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் அதிகமான வனவிலங்கு தாக்குதல்கள் கேரளத்தில் நடந்துள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானவர் இறந்துள்ளனர். கேரளாவில் வனவிலங்கு தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பலருக்கும் சிகிச்சைக்கான நிதி உதவி கூட அரசு வழங்கவில்லை. வனவிலங்குகளால் தாக்குதலுக்கு ஆளாகி அரசின் உதவி எதிர்பார்த்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் மலையோர சமர யாத்திரை

பிற மாநிலங்களில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுக்கிறார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வனவிலங்கு கண்காணித்து காட்டில் விரட்டுவதற்கு நவீன கருவிகளை ஏற்படுத்தியுள்ளன. கேரள வனத்துறைக்கு அவறறை பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை. கேரள அரசு மலையோர மக்களை வேறுபடுத்தி பார்க்கிறது. தலைவிதிப்படி அவர்கள் வாழ்ந்து கொள்ளட்டும் என நினைக்கிறது அரசு. வனவிலங்கு விஷயத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். கேரளாவில் இருந்து வெற்றி பெற்று சென்றுள்ள அனைத்து காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்களும் தீர்க்கமான முடிவை பாராளுமன்ற கூட்டத்தில் எடுக்க உள்ளார்கள். பிரியங்கா உள்ளிட்ட அனைத்து எம்பி-க்களும் வன விலங்குகள் விஷயத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

அதேசமயம் மாநில அரசு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். வனத்துறையில் தேவையான காவலர்களை நியமிக்க வேண்டும். தேவையான பணியாளர்களும், கருவிகளும் வனத்துறை வசம் இல்லை. 52 ஆண்டுகளுக்கு முன் வனவிலங்கு சட்டம் இயற்றப்பட்டது. அனைத்து சட்டங்களும் காலத்திற்கு ஏற்றபடி மாறுகின்றன. அது போன்று வன விலங்குகளுக்கான சட்டங்களையும் மாற்ற வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சட்ட திருத்தம் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. இப்போது தேவை ஏற்பட்டுள்ளதால் மக்கள் சட்ட திருத்தம் கேட்கிறார்கள். எனவே மக்களுக்காக நாங்கள் இந்த யாத்திரையை நடத்துகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து...

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி...

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என...