14
September, 2026

A News 365Times Venture

14
Monday
September, 2026

A News 365Times Venture

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

Date:

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்.

டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில்  70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி புது டெல்லி.

பர்வேஷ் வர்மா – கெஜ்ரிவால்

அந்தத் தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா களமிறங்கினார். சுமார் 4000 வாக்கு வித்தியாசத்தில் பர்வேஷ் வர்மா கெஜ்ரிவாலைத் தோற்கடித்து வெற்றி பெற்று இருக்கிறார். பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பர்வேஷ் வர்மா
பர்வேஷ் வர்மா

வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய    அவர், “இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் டெல்லி மக்களுக்கும் நன்றி. மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" – ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது...

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்…" – கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள...

Vijay: “முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ – அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,...

மதுரை பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு...