25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

Delhi: சிவராத்திரியில் அசைவம் பரிமாறியதாக தகராறு; பெண்கள் மீது தாக்குதல் – SFI, ABVP சொல்வதென்ன?

Date:

நேற்றைய தினம் (26.02.2025 – புதன் கிழமை) தெற்கு டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி தினத்தில் பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவருந்தியதற்காக மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி காவல் நிலையம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. டெல்லி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஏ.பி.வி.பி அமைப்பினர் சொன்னபடி மகா சிவராத்திரி இரவில் அசைவ உணவு பரிமாறுவதை நிறுத்தாததால் உணவு விடுதியில் மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

பெண்கள் உட்பட, மாணவர்களையும் உணவக பணியாளர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் மாணவர் சங்கத்தினர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் தகவல்களை ஏ.பி.வி.பி-யினர் மறுத்துள்ளனர். மகாசிவராத்திரியில் விரதம் இருந்த மாணவர்களுக்கான உணவகத்தில் SFI-யினர் வலுக்கட்டாயமாக அசைவ உணவை பரிமாற முயன்றதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தினரின் நடவடிக்கை மத சுதந்திரத்தையும் நல்லிணக்கத்தையும் குழைக்கும் முயற்சி என ஏ.பி.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை தேவை எனக் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் உணவகத்தில் வன்முறை நடந்ததைக் காண முடிகிறது. ஏ.பி.வி.பி-யினர் பெண்களைத் தாக்கும் வீடியோ எஸ்.எஃப்.ஐ சார்பாக வெளியிடப்பட்டது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' – மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்...

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...