13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

Date:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.

இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் குறிப்பாக மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்” என்றார்.

ப.சிதம்பரம்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “த.வெ.க இப்போதுதான் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

யாராக இருந்தாலும் ஊடகங்களை, பத்திரிகைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும். மதசார்பற்றக் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுதான் த.வெ.கவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பற்றி நாளை சிந்திக்கலாம். இப்போது த.வெ.க நல்லாட்சி தர வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தருகிறோம்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

நாங்கள் இந்தியக் கூட்டணியில் இருக்கிறோம். ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்கள் தேசிய தலைவர்கள் அதில் கலந்துகொள்வார்கள்.

பிரவீன் சக்ரவர்த்தி எங்களை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். ‘நான் வெளியிட்ட பதிவு தவறுதான். அதைப் பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...