தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கடும் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பா.ஜ.க, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தனது செல்வாக்குமிக்க இடங்களில்கூட முன்னிலை பெற முடியாமல் திணறி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விடப் பின்தங்கியுள்ளனர்.
குறிப்பாக, நகர்ப்புற மற்றும் இளைஞர்களின் வாக்குகள் த.வெ.க பக்கம் சாய்ந்ததும், கிராமப்புறங்களில் தி.மு.க-வின் பலமான வாக்கு வங்கி நிலைத்து நிற்பதும் பா.ஜ.க-வின் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்தும், வாக்குகள் சரியாகப் பரிமாற்றம் செய்யப்படாதது மற்றும் தேசிய அரசியல் போக்குகளுக்கு எதிராகத் தமிழக மக்களின் மனநிலை இருப்பது அக்கட்சியின் பின்னடைவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
பல தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்த திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
குறிப்பாக பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்களான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் தொடர் பின்னடைவு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




