25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

BJP: "பண்ணையார் என அன்போடு அழைக்கப்படும் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து அவரது வழியில்…" – அண்ணாமலை

Date:

2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகளைத் திட்டமிட்டு மத்திய பாஜக தமிழ்நாட்டு அரசியலில் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது.

இதில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அடிபட அண்ணாமலை பதவி குறித்த பேச்சும் எழுந்தது. பின்னர் மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது.

இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்தார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் ஒரு மனதாகப் போட்டிகளின்றி பாஜக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராகப் பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பிறகுப் பேசியிருக்கும் அண்ணாமலை, “ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்று, ஒரு முறை அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன்.

இரண்டு முறை பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். இப்படி அரசியலில் நீண்ட நெடிய அனுபவமிக்கவர். எல்லாராலும் பண்ணையார் என்று அன்போடு அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அவர்கள்.

அவருடன் இணைந்து அனைவரும் பணியாற்றுவோம். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியைச் சாத்தியப்படுத்துவோம்.

தமிழகத்திற்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் பலமாகியுள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியை நோக்கி பணியாற்றும் நயினார் நாகேந்திரன் அவர்களின் பின்னால் நாம் அனைவரும் ஒரே அணியாக அணிவகுத்து நின்று, அவரின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிபெற வைக்கப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.

உங்களை வழிநடத்த எனக்கு நான்கு ஆண்டுகள் அனுமதி கொடுத்ததற்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....