13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

ADMK: “ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு

Date:

ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.

ராஜன் செல்லப்பா

சமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

‘கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், ‘எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.’ என்று பேசியிருந்தார்.

 ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ”அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் – சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக...

விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில்...

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ – எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள்...