25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

ADMK: “ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு

Date:

ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.

ராஜன் செல்லப்பா

சமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

‘கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், ‘எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.’ என்று பேசியிருந்தார்.

 ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ”அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....