21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' – அன்புமணி திட்டவட்டம்

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ” கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது.

அன்புமணி – ராமதாஸ்

நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குழப்பங்களுக்கு முடிவு கட்டுவேன். ராமதாஸ் அய்யா கொள்கைத் தலைவர். அவரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்.

அவர் நமக்கான வழிகாட்டி. நான் தான் கட்சியின் தலைவர். விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வேலையை பார்க்க வேண்டும். தூசியை தட்டுவதைப் போல விமர்சனங்களை தட்டிவிடுங்கள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. களத்தில் நான் இருக்கிறேன். யாரும் உங்கள் மீது கை வைக்க முடியாது. பொறுப்பை பகிர்ந்துகொள்ளுங்கள் எல்லாவற்றையும் நீங்களே பார்க்க வேண்டும் என்றில்லை. கட்சி யாருடைய சொத்தும் கிடையாது.” என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' – ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த...

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" – திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்....

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' – மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின்...

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி...