28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

'இந்தியா அடுத்து ஜெர்மனியை தாண்டுவது மட்டும் முக்கியமல்ல…' – ஆனந்த் மஹிந்திரா கூறுவது என்ன?

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி, இந்தியா ஜப்பானை முந்தி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் என்கிற இடத்தை பிடித்துள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டதாக மாறி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“நான் வணிக கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை முந்துவது பெரும் கனவாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடு.

ஜப்பானை முந்திய இந்தியா!

இது சிறிய சாதனை அல்ல

இது சிறிய சாதனை அல்ல. ஜப்பான் நீண்ட காலமாக புகழ் பெற்ற உற்பத்தி திறனாகவும், மீள்தன்மையுடனும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்தியர்களின் லட்சியம் மற்றும் புத்திசாலித்தனம் தான் நாம் இதை அடைவதற்கு காரணம் ஆகும்.

நாம் இதை கொண்டாடும்போது மிக மகிழ்ச்சியாக இருந்துவிடக் கூடாது.

இந்தியாவின் அடுத்த பாய்ச்சல், ஜெர்மனியை முந்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. தனிநபர் உற்பத்தி திறனை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.

நாம் தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்க நிர்வாகம், உள்கட்டமைப்பு, கல்வி, உற்பத்தி, முதலீடு என அனைத்திலும் போதுமான பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா கொண்டிருக்க வேண்டும்”. என்றார்.

Loading…


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....