27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

Stalin: `2026 மட்டுமல்ல 31, 36-லும் திராவிட மாடல் ஆட்சி தான்!' – சொல்கிறார் ஸ்டாலின்

Date:

5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்‌. நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவின் 127- வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடுகள் எதிர்பார்த்த விதத்தை விட மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இது குறித்து மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாக ப.சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய கருத்து மட்டுமே. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. 2026 மட்டுமல்ல 2031, 2036 – லும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் தொடரும் ” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எம்.பி ஆ. ராசாவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருடன் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். உள்ளுர் மக்கள் பலரும் முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" – சிபிஐ வீரபாண்டியன்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய...

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால்  ஊராட்சிக்கு உட்பட்ட...

“மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர்

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக...

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில்...