15
April, 2025

A News 365Times Venture

15
Tuesday
April, 2025

A News 365Times Venture

பாஜக கூட்டணி: "விழி பிதுங்கிப் பதறும் திமுக; ஆனந்தத்தில் அதிமுக" – ராஜேந்திர பாலாஜி குதுகல பேச்சு

Date:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

ராஜேந்திரபாலாஜி

எடப்பாடியார் என்ன செய்வார், என்ன செய்துவிட முடியும், என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்களும், செய்தி சேனல்களும் எதிர்பார்த்த இந்த நேரத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். அ.தி.மு.க ஆட்சிய மலரச் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி காட்டியுள்ளார்.

பங்குனி உத்திரத்தன்று எடுக்கின்ற முடிவுகள் வெற்றிபெறும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் வெற்றி நம் கண் முன்னே தெரிகிறது.

பேச்சு

2026 மே மாதம் சட்டமன்ற கதாநாயகனாக முதல்வராக எடப்பாடி பழனிசாமி செல்ல இருக்கிறார். 2026-ல் வெற்றி பெற்று ஜெயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்குச் சிறப்புரை ஆற்றுவார்.

இந்த காட்சிகள் எல்லாம் எங்கள் கண்முன்னே வந்து செல்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியைப் பார்த்து விழி பிதுங்கிப் பதறிப்போய் இருக்கிறது தி.மு.க. கூட்டம். அ.தி.மு.க. கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று...

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும்,...

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர்...

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை… அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல்...