18
September, 2026

A News 365Times Venture

18
Friday
September, 2026

A News 365Times Venture

மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு – வேட்பாளர் திடீர் கைது!

Date:

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றார்.

இதில் பவானிபூர் தொகுதி என்பது மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதி. அரசியல் காரணங்களுக்காக பவானிபூர் தொகுதியின் எம்எல்ஏவாகச் சுவேந்து அதிகாரி தொடர முடிவு செய்திருக்கிறார்.

நந்திகிராம் தொகுதி

இதனால், 2016, 2021, 2026 என மூன்று தேர்தல்களில் தனக்கு வெற்றியைத் தந்து தந்த நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

2021-ஆம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி vs மம்தா பானர்ஜி என்று தேர்தல் களம் கண்டபோதும், சுவேந்து அதிகாரிக்கே வெற்றியைத் தந்தனர் நந்திகிராம் மக்கள் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

நந்திகிராம் தொகுதியில் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தாவிற்கு நெருக்கடி

ஆனால், அந்த வேட்பாளரோ வேட்புமனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சுவேந்து அதிகாரியைச் சந்தித்தார். இதன் விளைவாக, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.

இதில் மம்தாவிற்குக் கடுமையான நெருக்கடி. இதனால், மம்தா, ‘நாட்டின் நலனுக்காக’ காங்கிரஸ் அறிவித்த நந்திகிராம் வேட்பாளரை ஆதரிப்பதாக இன்று அறிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கைது

இதற்கிடையில் , காங்கிரஸ் வேட்பாளரான மிலன் பிரதானைக் கைது செய்திருக்கிறது மேற்கு வங்க போலீஸ். இவரது கைதுக்குப் பழைய கொலை வழக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

நந்திகிராமைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்… மிலனுக்கு மம்தா கொடுக்கும் ஆதரவு பாஜகவிற்கு பின்னடைவாக அமையுமோ என்பதற்காகத்தான் சுவேந்து அதிகாரி இந்தக் கேம் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

DMK: 'சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' – விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன?

த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை...

“விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் UPI கட்டணம்" – நடைமுறைச் சிக்கல்கள் என்ன?| ஓர் அலசல்

டிஜிட்டல் பரிவர்த்தனைடீ குடிப்பது முதல் தங்கம் வாங்குவது வரை இன்று எல்லாமே...

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” – உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…' – முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு...