30
August, 2026

A News 365Times Venture

30
Sunday
August, 2026

A News 365Times Venture

"என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!"- வன்னிஅரசுக்கு உதயநிதி பதில்

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது.

அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் ‘நீ, பேசு’ என்றார். என்னால் பேச முடியவில்லை.

அமைச்சர் வன்னி அரசு

ஆனால் அந்த அவையில் அண்ணன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எனக்காக பேசினார். எனது வெற்றியைப் பாராட்டி பேசிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் தான்.

நாங்கள் தொடர்ந்து நன்றிகளைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதிர் தரப்பில் (திமுக) இருந்து பேசக்கூடியவர்கள் யாருமே எங்களுடைய எழுச்சி தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாகத் தெரியவில்லை.

நன்றி என்றால் இருவருக்கும் பொதுவானதுதான். இரண்டு பக்கமும் வாக்குகள் தான் இருக்கின்றன. உழைப்புகள் தான் இருக்கின்றன. ஆனால் இதுவரை அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவில்லை என்று இந்த அவையில் பதிவு செய்கிறேன்” என்று பேசினார்.

வன்னி அரசின் இந்தப் பேச்சுக்கு எழுந்து பதில் சொன்ன எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொல். திருமாவளவன் அண்ணனுக்கு நாங்கள் நன்றி சொல்லவில்லை என்று அமைச்சர் சொல்கிறார்.

udhayanidhi  stalin
udhayanidhi stalin

ஆனால் நான் அவரிடம் சொல்லிக்கொள்வது எங்களுடைய தலைவருக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என மாறும் கூட்டணி கிடையாது.

அது ஒரு கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று நான் பலமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறேன். திருமாவளவனுக்கு நாங்கள் என்றுமே நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

சந்தை என்றாலே பரபரப்பும், மக்கள் கூட்டமும், வியாபாரிகளின் குரல்களும்தான் நினைவுக்கு வரும்....

ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+...

“நானே மாடுபிடி வீரர்தான்; நான் எப்படி ஜல்லிக்கட்டு பற்றி தவறாக பேசுவேன்!"- எம்எல்ஏ கருப்பையா

சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில்...

700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு – விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700...