2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்?

Date:

சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026’-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும்.

இந்தப் புதிய திட்டத்தின் படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் சில முக்கிய காரணங்களுக்காக தங்களது வைப்பு நிதி கணக்கில் இருந்து பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பகுதி பணம் என்றால், ஊழியர்கள் தங்களக்கு தகுதியான மொத்தப் பிஎஃப் தொகையில் (Eligible Member Balance) 75 சதவிகித பணத்தை முக்கிய தேவைகளுக்காக எடுத்துகொள்ளலாம்.

பி.எஃப்

மீதி 25 சதவிகித தொகையை கட்டாயம் பி.எஃப் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

அதாவது, ஒருவருக்கு பிஎஃப் கணக்கில் தகுதியான தொகையாக ₹1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

புதிய திட்டத்தின் படி, இதில் ரூ.25,000-ஐ பி.எஃப் கணக்கிலேயே எப்போதும் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.75,000 தொகையை தற்போதைய விதிகளுக்கு உட்பட்டு பகுதிப் பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

சரி… என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க முடியும்?

> தனது மற்றும் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளுக்கு,

> கல்விச் செலவுகள் (இது உறுப்பினர் காலத்தில் 10 முறை மட்டுமே எடுக்க முடியும்)

> திருமணம் (இது உறுப்பினர் காலத்தில் 5 முறை மட்டுமே எடுக்க முடியும்)

> வீடு வாங்குதல், வீடு கட்டுவது, வீடு மராமத்து, வீட்டுக் கடன் போன்றவைக்கு,

பி.எஃப்
பி.எஃப்

> முக்கிய சூழல்களுக்கு

> வேலையில் இருந்து வெளியேறினால் (இது ஒரு நிதி ஆண்டிற்கு அதிகபட்சம் 2 முறை பணம் எடுக்க முடியும்)

வேலையில் இருந்து வெளியேறுவதை தவிர, மேலே கூறியுள்ள அனைத்து காரணங்களுக்கும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக சேர்ந்து 12 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.

வேலையில் இருந்து வெளியேறினால் உறுப்பினர் ஆகி 12 மாதங்கள் முழுவதும் நிறைவடையவில்லை என்றாலும், பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஸ்டாலினைப் பார்த்து அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது அற்பமானது"- டிடிவி தினகரன்

இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள்...

"தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" – பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி...

தஞ்சாவூர்: 'நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?' – பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள்...

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி ...