21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

Date:

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

அமெரிக்கா, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே, ‘லெபனான் உள்ளிட்ட எங்கேயுமே இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது’ என்பது தான்.

தங்களால் லெபனான் மீது தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஈரான்.

ஆனால், இஸ்ரேல் நேற்று நள்ளிரவு, இன்று காலை என லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரம்ப் – மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

இதனால், ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த டெக்னிக்கல் பேச்சுவார்த்தை தள்ளி சென்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக தங்களது குழுவை ஸ்விட்சர்லாந்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் ஈரான். ஆனால், லெபனான் மீதான தாக்குதலால் தங்களது குழுவை ஈரான் அனுப்பவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஈரான் போரை விரைவில் முடிக்க அமெரிக்கா முனைப்புடன் இருக்கிறது. ஈரான் இதை தங்களுக்கு சாதகமாக சற்று மாற்றி போரை முடிக்க வேண்டும் என்று ஈரானும் நினைக்கிறது.

ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' – மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக்...

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட…" – பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும்...

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள்...

மோடி – ட்ரம்ப் என்ன பேசினார்கள்? – சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது...