12
July, 2025

A News 365Times Venture

12
Saturday
July, 2025

A News 365Times Venture

”யாரையும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” – விஜய் குறித்து அமைச்சர் கோவி.செழியன்

Date:

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில் தான் இருமொழிக் கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் சட்டமாக்கி, இன்று வரை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஏற்றுக்கொண்ட பாசிச வெறிப்பிடித்த பா.ஜ.க 2025 புதிய வரைவு கொள்கை என்ற பெயரில், தொடக்க கல்வியிலும், உயர் கல்வியிலும் மும்மொழிக் கொள்கை பாடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திணிக்கிறார்கள்.

கோவி.செழியன்

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 10 ஆயிரம் கோடி தருவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேம் என இந்தியாவில் துணிச்சலுடன் கூறிய முதல் வீர திருமகன் தமிழக முதல்வர் தான். எனவே, எந்த இடர்பாடுகள் வந்தாலும், இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மீண்டும், 1965 தமிழகத்திற்கு வர கூடாது என அனைத்து அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போர்களம் பூண்டுள்ளனர்.

இந்த உஷ்ணத்தையும், எதிர்ப்பையும் உணர்ந்து மும்மொழிக் கொள்கையை திணிப்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை மக்கள், சட்டம், சட்டசபை போராட்டமும் தமிழகத்தில் தொடரும். விஜய்யின் கல்விக்கொள்கை என்ன? கல்வியின் தொடர்பு என்ன? அவர் ஆரம்ப காலத்தில் இருந்து மொழி போர் போராட்டத்தில் கலந்துகொண்ட வரலாறு என்ன என்பது எல்லாம் மக்கள் நன்றாக அறிவார்கள். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இன்னும் தெளிவாக தெரியும். நான் யாரையும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...