தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்டதும் அந்த 11 சீட்டுகளைத் தான்.
ஆக, 11 சீட்டுகளுக்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக.
காங்கிரஸ் நேற்றே தவெகவிற்கு ஆதரவு அளித்துவிட்டது. அதில் தவெகவிற்கு 112 சீட்டுகள் கிடைத்துவிட்டன.
தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், விசிகவின் ஆதரவை கேட்டு வந்தது தவெக. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இன்று மதியம் ஆதரவு அளித்துவிட்டன.
இதையடுத்து, உயர்நிலைக் குழு கூட்டத்தை நடத்தி முடிவைக் கூறுவதாக தெரிவித்திருந்தது விசிக. ஆனால், கால தாமதம் ஆகிக்கொண்டே போனது.
இன்னொரு பக்கம், ஆளுநரை சந்திக்க விஜய் கிளம்பிவிட்டார். இந்த வேளையில், தவெக காய்களை நகர்த்தி முஸ்லீம் லீக் கட்சியின் இரண்டு சீட்டுகளைப் பெற்றுவிட்டது.
ஆக, 118 சீட்டுகள் பெரும்பான்மையுடன் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் விஜய்.
இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, விசிக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்து, தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது தவெகவிற்கு 120 சீட்டுகள் கிடைத்துள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே சொல்லியிருந்ததுப் போல, நாளை ஆதரவு கடிதம் வழங்குகிறார்.
இன்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார்.




