13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

‘2006-ல் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்?’ – உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

Date:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , “காங்கிரஸ் பேரியக்கத்தை துரோகிகள் என்று உதயநிதி சொல்லி இருப்பது தந்தையும், தனையனும் முதல்வர் ஆசை கைகூடவில்லை என்ற ஏக்கத்தின் உச்சிக்கே சென்று பேசி வருவதையே காட்டுகிறது. காங்கிரஸ் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்த ஒரே காரணத்தினாலேயே ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நீங்கள் செய்த பல தவறுகளுக்கு நாங்கள் பழியை சுமந்து கொண்டு இருந்தோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மட்டும் விடுதலை பெறவில்லை, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்தே விடுதலை கிடைத்துள்ளது.

தி.மு.க-வின் ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களின் வெறுப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலிகடா ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. தி.மு.க ஆட்சியில் செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியபோது, தி.மு.க அதை திருத்தி கொள்ள தயாராக இல்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியின் மீது விஷத்தை கக்க ஆரம்பித்து. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை உடைக்க தி.மு.க தயாராகிவிட்டது.

கணபதி சிவக்குமார்

தேர்தலுக்கு முன்பே ஊடகங்களின் கருத்துக்கணிப்பை நம்பி மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்ற நப்பாசையில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கூட்டணி கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் சொற்ப இடங்களை ஒதுக்கி கூட்டணி தர்மத்தை தொலைத்தது யார்? த.வெ.க ஆட்சி அமைக்க விடாமல், அதிமுகவோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க திரை மறைவு வேலைகளை செய்தது யார்? அந்த திரை மறைவு வேலைகளுக்கு உடன்படாமல் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க-விற்கு காங்கிரஸ் பேரியக்கம் ஆதரவு அளித்ததால் தானே காங்கிரஸ் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி.

கூட்டணி தர்மத்தை மதித்து கூட்டணி  கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் 96 இடங்களையே தி.மு.க வென்ற போதும், கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் ஐந்தாண்டுகள் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்? தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்தவரை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க செய்த துரோகங்களை பட்டியலிட்டால் புத்தகம்தான் எழுத வேண்டும். யாருக்கு யார் துரோகம் இழைத்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

உதயநிதி
உதயநிதி

19 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தி.மு.க வெற்றி பெற்றது, காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் மறந்துவிட கூடாது. இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க-வை மூன்றாவது இடத்திற்கு மக்கள் விரட்டியடித்து இருப்பார்கள்.  கூட்டணி கட்சிகளால் தான் கௌரவமான இடங்களை தக்கவைத்து தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் உள்ளது. இல்லையென்றால் 20 தொகுதிகள் மட்டுமே வென்றிருக்கும். இதையெல்லாம் மறந்து தான்தோன்றித்தனமாக பேசுவதை இனிமேலாவது உதயநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடுமையான பதிலடி கொடுப்பதற்கு தயங்க மாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...