16
September, 2025

A News 365Times Venture

16
Tuesday
September, 2025

A News 365Times Venture

2,000 ஏக்கர் நிலத்தை மூழ்கடிக்கும் நீர்மின் திட்டத்தை கைவிட முருகனுக்கு காவடி எடுத்த மக்கள்! ஏன்?

Date:

பைக்காரா முதல் குந்தா வரை பல்வேறு அணைக்கட்டுகளைக் கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டத்தில் சில்ஹள்ளா ஆற்றின் குறுக்கே புதிதாக மிகப்பெரிய அணைக்கட்டுகளை உருவாக்கி அதன் மூலம் நீர்மின் உற்பத்தியைத் தொடங்க மத்திய மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மெகா டேம் புராஜெக்ட்டான சுமார் 7,000 கோடி மதிப்பிலான இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றினால் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றாலும்,

சில்ஹள்ளா காவடி

நீலகிரியின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பையும் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலமும் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட இருக்கிறது. இதில் சில கிராமங்கள் முதல் சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களும் அடக்கம்.

சில்ஹள்ளா காவடி

இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக படுகர் சமுதாய மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற காவடிப் பெருவிழாவில் சில்ஹள்ளா அணைக்கட்டு திட்டத்தை கைவிட வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய காவடிகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றுள்ளனர். பக்தர்களுடன் திடிரென ஊடுருவிய போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்திருக்கிறார்கள்.

சில்ஹள்ளா காவடி

இது குறித்து போராட்டக்காரர்கள், ” நீலகிரி மலைக்கும் இந்த மலையில் வாழும் மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த இருக்கும் இந்த அணைக்கட்டு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இறைவன் முருகனுக்கு சில்ஹள்ளா காவடி என்ற பெயரில் காவடி எடுத்தோம். போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...