10
September, 2026

A News 365Times Venture

10
Thursday
September, 2026

A News 365Times Venture

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' – தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

Date:

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு அங்கிருந்த வி.ஏ.ஓ, அவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, `பூர்வீகச் சொத்துப் பட்டாவில் என்னுடைய பெயரை சேர்க்க வி.ஏ.ஓ லஞ்சம் கேட்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அதனால் உங்களால் முடிந்த பணத்தை பிச்சையாகப் போடுங்கள். இப்படிக்கு ஏமாந்த தமிழன்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று யாசகம் செய்தார். அதைக் கேட்ட பொதுமக்களும் தங்களால் முடிந்த தொகையை அவரது தட்டில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அப்துல் சலீம் ஷேக்கிடம் இது குறித்துக் கேட்டபோது, “வருவாய்த்துறையில் இருக்கும் ஒருசில அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. மக்களிடம் பிச்சையைப் போல லஞ்சம் வாங்குகிறார்கள். நான் ஒரு விவசாயி. நான் முறைகேடாக என் பெயரைச் சேர்க்கும்படி கூறவில்லை.

என்னுடைய பூர்வீகச் சொத்தில் என் பெயரை சேர்க்க வேண்டும் என்று உரிய சான்றிதழ்களை வைத்து மனு கொடுத்தேன். அதற்குத்தான் வி.ஏ.ஓ அசோக் குமார் என்னிடம் லஞ்சம் கேட்டார். அவர் லஞ்சம் கேட்ட ஆடியோ என்னிடம் இருக்கிறது. ஆனால், `உன்னால் என்ன செய்ய முடியுமோ செய். யாரிடம் போகனுமோ போ’ என்று தைரியமாகச் சொல்கிறார். அதனால் வேறு வழியின்றி அவருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் – ஏன் முக்கியம்?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ்....

“நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?" – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...

`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்…' – பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம்...