13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

மொழி விவகாரம்: `கன்னடர்களும், மலையாளிகளும் உண்மையை ஏற்கத் தயங்கினாலும்..!' – திருமாவளவன் சொல்வதென்ன?

Date:

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” என தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

சித்தராமையா- கமல்ஹாசன்

மேலும், கர்நாடகாவிலுள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க உட்பட கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன் இந்த விவகாரத்தில், “வரலாற்று மொழியியல் வல்லுநர்கள் தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பல மொழியியல் அறிஞர்கள் அதைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளனர். இன்றைக்கு கன்னடம், மலையாளம் பேசக்கூடிய மக்கள் அந்த உண்மையை ஏற்கத் தயங்கலாம்.

ஆனால், வரலாறு வரலாறுதான், உண்மை உண்மைதான். அதை எவரும் மறுக்க முடியாது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அந்த உண்மை சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழிலிருந்து பிற மொழிகள் சம்ஸ்கிருத கலப்பால் உருவாகியிருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மை.” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ `பிரபலம்' என்பது மட்டுமே கட்சி தொடங்குவதற்குப் போதுமா?" – நடிகர் நாசர்

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு...

அ.தி.மு.க- வில் இன்று இணையும் காளியம்மாள்? என்ன பொறுப்பு?

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக தகவல்கள்...

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது – ஆர்டிஐயில்வெளியான தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய...

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! – காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான...