1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

`மூன்று முக்கிய முடிவுகள்' – தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – மாணிக்கம் தாகூர் விளக்கம்

Date:

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், “நல்ல தொடக்கமாகவே தவெக ஆலோசனைக் கூட்டம் அமைந்துள்ளது. குறைந்தபட்ச செயல்திறன் பற்றி பேசினோம்.

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டோம். மிகவும் நேர்மறையாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து தவெக ‘இந்தியா’ கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, “யார் யார் எம்.பி-க்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். தவெகவிற்கு எப்போது எம்.பி-க்கள் வருகிறார்களோ அப்போது இந்தியா கூட்டணி பற்றி பேசுவோம் ” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'- சீமான் எச்சரிகை

கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத்...

`தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஸ்டாலின்; இனியாவது திருந்துங்கள்' – நிர்மல் குமார்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச்...

புதுக்கோட்டை டு நுங்கம்பாக்கம்: திருப்பரங்குன்றம் Files-ஐ துரத்தும் `மேலிட உத்தரவு'- என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் Filesஊடகவியலாளர் ‘அறக்கலகம்’ தவம் மற்றும் தமிழ்தாசன் இணைந்து தயாரித்து...

`நீங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்' – இபிஎஸ்-ஸுக்கு வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று...